கத்தார் நாட்டில் எதிர்பாராத விதமாக ராஸ் லஃப்பான் தொழில்துறை மண்டலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) இரவு ஏற்பட்ட துயரமான விபத்தில் 12 இந்தியர்கள் உயிர் பலியாகினர், அதில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பபித் (26), சஜித்குமார் (25), சுவின் (24) ஆகிய மூன்று தமிழர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஈடு செய்ய முடியாத இழப்பைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமையையும், ஆறுதலையும் இறைவன் அவர்களுக்கு வழங்க பிரார்த்திக்கிறேன்.
துரை வைகோ திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மறுமலர்ச்சி திமுக 23.06.2026




