சனி, 18 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
வெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.1993 ஏப்ரல் 14–15: நடந்தது என்ன? 33 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோவின் முழு விளக்கம்!ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுபுதுக்கோட்டை திஷா (DISHA) குழுக்கூட்டம்: மக்கள் நலத் திட்டங்களை விரைந்து முடிக்க துரை வைகோ எம்.பி., வலியுறுத்தல்!ஞானபீட விருது பெறும் கவிப்பேரரசு வைரமுத்து!100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!கழக சட்டதிட்ட விதிகளில் திருத்தம்04.08.2026 டெல்லியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் நூல் வெளியீட்டு விழா! - கழகத் தோழர்களின் கவனத்திற்குஆளுநர் உரையை வரவேற்கிறேன் துரை வைகோ எம்.பி.,வெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.1993 ஏப்ரல் 14–15: நடந்தது என்ன? 33 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோவின் முழு விளக்கம்!ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுபுதுக்கோட்டை திஷா (DISHA) குழுக்கூட்டம்: மக்கள் நலத் திட்டங்களை விரைந்து முடிக்க துரை வைகோ எம்.பி., வலியுறுத்தல்!ஞானபீட விருது பெறும் கவிப்பேரரசு வைரமுத்து!100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!கழக சட்டதிட்ட விதிகளில் திருத்தம்04.08.2026 டெல்லியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் நூல் வெளியீட்டு விழா! - கழகத் தோழர்களின் கவனத்திற்குஆளுநர் உரையை வரவேற்கிறேன் துரை வைகோ எம்.பி.,

துரை வைகோ எம்.பி., தொடர் முயற்சிக்கு வெற்றி! யேமனில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடல் தாயகம் திரும்புகிறது!

துரை வைகோ எம்.பி., தொடர் முயற்சிக்கு வெற்றி! யேமனில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடல் தாயகம் திரும்புகிறது!

துரை வைகோ தொடர் முயற்சியால், யேமனில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடல் தாயகம் திரும்புகிறது.

யேமன் நாட்டு நிறுவன எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த திரு. ஃபெர்னாண்டோ ரெமிசியன் சுரேஷ் 08.03.2026 அன்று, கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் கடுமையான பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக யேமனின் ஹொதெய்தா நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர முயற்சிகளுக்கும் பிறகு அவர் 03.04.2026 அன்று உயிரிழந்தார்.

அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்காக 12.04.2026 அன்று ரியாத்திலுள்ள இந்திய தூதரகம் தடையில்லா சான்று (NOC) வழங்கியுள்ளது. பின்னர், அவரது உடல் விமான மற்றும் போக்குவரத்து வசதிகளின் பற்றாக்குறை மற்றும் சில நிர்வாக சிக்கல்களால் தாய்நாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கை தாமதமாகியுள்ளது.

இந்நிலையில், அவரது உடல் இந்தியா வந்து சேரும் தேதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை என என்னிடம் தெரிவித்து, மிகுந்த மனவேதனை மற்றும் துயரத்தில் அவரது உடலை கொண்டுவர முறையிட்டனர்.

இந்த தகவலை மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கு 04.05.2026 அன்று கடிதம் எழுதி, சம்பந்தப்பட்ட இந்திய தூதரகம் மற்றும் அதிகாரிகளுடன் உடனடி ஒருங்கிணைப்பை மேற்கொண்டு, மறைந்த திரு. ஃபெர்னாண்டோ ரெமிசியன் சுரேஷ் அவர்களின் உடலை மிக விரைவாக இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

அதன் அடிப்படையில் இன்று அவரது உடல் யேமனிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுவிட்டதாக தகவல் பெற்றேன். இன்றே கேரளம் வழியாக அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு அவரது உடல் அனுப்படவுள்ளதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உறுதிப்படுத்திக்கொண்டேன்.

அன்புடன் துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) முதன்மைச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக 12.05.2026

துரை வைகோ எம்.பி., தொடர் முயற்சிக்கு வெற்றி! யேமனில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடல் தாயகம் திரும்புகிறது! | சங்கொலி