தமிழர் நலன் காக்கும், தமிழ்நாட்டு உரிமையை நிலைநாட்டும் திராவிட இயக்க அரசியல் மரபை மீறாத ஆளுநர் உரையை வரவேற்கிறேன். நமது தனித்துவமான இருமொழிக் கொள்கை, தமிழ்நாட்டின் மாநில உரிமை, மக்கள் நலன் ஆகியவற்றில் உறுதிப்பாடு, மாநில எதிர்காலம் காக்கப்பட "தேசியக் கல்விக் கொள்கை 2020"-ஐ எதிர்க்கும் திடமான குரல், வரலாற்றில் இல்லாத அளவிலான நிதிப் பற்றாக்குறை நிலவும் சூழலிலும் தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்கும் தீவிரம், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் முனைப்பு, கனிமவளங்களை முறைப்படுத்தி அரசின் வருவாயை இரட்டிப்பாக்கும் திட்டம், அனைத்தையும் உள்ளடக்கிய சமூகநீதிப் பாதைக்கான உள்ளடக்கம், மாநில அரசின் உரிமைகளைப் பாதுகாக்க ஒன்றிய அரசை நட்புணர்வுடன் அணுகும் முறை என இன்றைய ஆளுநர் உரை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இதை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும், பொதுமக்களைக் கொன்றவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும், போராடியவர்கள் மீதான பொய் வழக்குகளை இரத்து செய்ய வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
மேலும் படிக்க »




