எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி!
எனது கோரிக்கையை ஏற்று, இன்று (08.07.2026) முதல், திருச்சி – சார்லபள்ளி (ஹைதராபாத்) தற்காலிக சிறப்பு வாராந்திர இரயில், நிரந்தர வாராந்திர விரைவு இரயிலாக இயக்கப்படுகிறது.
02.03.2026 அன்று ஒன்றிய இரயில்வே அமைச்சருக்கும், 07.03.2026 அன்று திருச்சி கோட்ட இரயில்வே மேலாளருக்கும் கடிதம் எழுதி, நேரிலும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினேன்.
பயணிகளின் தொடர்ச்சியான வரவேற்பும், அதிகளவிலான பயன்பாடும் காரணமாக, இந்த இரயில் சேவையை நிரந்தரமாக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியிருந்தேன்.
எனது கோரிக்கையை ஏற்று, 07615/07616 சிறப்பு இரயில், 17077/17078 என்ற எண்களில் நிரந்தர வாராந்திர விரைவு இரயிலாக இயக்கப்படுகிறது.
திருச்சி – ஹைதராபாத் இடையேயான நேரடி இரயில் இணைப்பை மேலும் வலுப்படுத்தும் இந்த நடவடிக்கை, ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு பெரும் பயனளிக்கும்.
இன்று மாலை ஸ்ரீரங்கம் இரயில் நிலையத்தில், சார்லபள்ளி (ஹைதராபாத்) – திருச்சி நிரந்தர வாராந்திர விரைவு இரயிலுக்கு வரவேற்பு அளித்தேன்.
தொடர்ந்து, இன்று இரவு 9.30 மணிக்கு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு இரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் திருச்சி – சார்லபள்ளி (ஹைதராபாத்) நிரந்தர வாராந்திர விரைவு இரயிலை கொடியசைத்து வழியனுப்புகிறேன்.
அன்புடன் துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) மறுமலர்ச்சி திமுக 08.07.2026




