புதன், 15 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!

இந்திய விமான நிலைய ஆணைய தலைவருடன் துரை வைகோ எம்.பி., சந்திப்பு

இந்திய விமான நிலைய ஆணைய தலைவருடன் துரை வைகோ எம்.பி., சந்திப்பு

இந்திய விமான நிலைய ஆணையத் தலைவரை சந்தித்த துரை வைகோ எம்.பி., திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கு விரைவில் ஒப்புதல் வழங்கவும், பாதிக்கப்படும் கிராம மக்களின் வசதிக்காக சுரங்கப்பாதை அமைக்கவும் வலியுறுத்தினார்.

புதுடெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணைய (Airports Authority of India) தலைவரை (Chairman, AAI) 27.05.2026 அவரது அலுவலகத்தில் சந்தித்து துரை வைகோ எம்.பி., உரையாடினர்.

அப்போது, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, தற்போதைய 2,423 மீட்டர் (7,949 அடி) நீளமுள்ள ஓடுதளத்தை 3,810 மீட்டர் (12,500 அடி) வரை நீட்டிக்கும் திட்டத்தின் அவசியத்தையும் அவசரத் தேவையையும் ஆணையத் தலைவரின் கவனத்திற்குக்கொண்டு சென்றார்.

மேலும், இந்த ஓடுதள விரிவாக்கத் திட்டத்தின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் விரிவாக எடுத்துரைத்து, திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிக்கு முன்னுரிமை அளித்து, விரைவில் ஒப்புதல் வழங்கி செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

அத்துடன், ஓடுதள விரிவாக்கப் பகுதிக்கு அருகிலுள்ள கீழக்குறிச்சி, கீழக்குறிச்சி தெற்கு தெரு, நத்தமடிப்பட்டி, முடுக்குப்பட்டி மற்றும் கணேஷ் நகர் ஆகிய கிராமங்களின் மக்கள் பயன்படுத்தும் இணைப்புப் பாதையைப் பாதுகாக்கும் வகையில், அங்கு சுரங்கப்பாதை (Underpass) அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். ஓடுதள விரிவாக்கத்தின் காரணமாக அவர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் இணைப்புச் சாலை மூடப்படாமல், அதற்கு மாற்றாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தனது கருத்துகளையும் முழுமையாக எடுத்துரைத்தார். துரை வைகோ எம்.பி., அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்ட ஆணையத் தலைவர், இந்த விவகாரங்களைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு விரைவில் பதிலளிப்பதாக உறுதியளித்தார்.