சுற்றுச்சூழலைப் பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி கண்ட கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மேட்டமலையில் சீமைக் கருவேல மரங்களை அகற்றினார்.
துணைப் பொதுச்செயலாளர் சு.ஜீவன், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு.இராசேந்திரன், அரசியல் ஆலோசனைக் குழு செயலாளர் சிப்பிப்பாறை அ.இரவிச்சந்திரன், தீர்மானக் குழு செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ப.வேல்முருகன், கம்மாப்பட்டி வீ.இரவிச்சந்திரன், சு.கண்ணன், விவசாய சங்கப் பிரதிநிதிகள், அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர் சிவகாசி கு.குமரேசன், மேட்டமலை குணசேகரன் மற்றும் விருதுநகர் மேற்கு, மத்தியம், கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர் (13.06.2026).






