ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட மறுமலர்ச்சி திமுக செயல்வீரர்கள் கூட்டம் 12.06.2026 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் மாவட்ட கழக அலுவலகமான அண்ணா அறிவகத்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜீனராஜ் அவர்கள் தலைமையில் கழக பொருளாளர் பொறியாளர் மு.செந்திலதிபன், தலைமைக் கழக செயலாளர் ஆ.வந்தியத்தேவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அக்கூட்டடதில் மாநகர் மாவட்ட செயலாளர் நா.முருகன், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பூங்கொடி சா.செந்தில்நாதன், மேற்கு மாவட்ட செயலாளர் கே.கே.சேதுபாஸ்கரன், கிழக்கு மாவட்ட செயலாளர் சோ.வீரக்குமாரன் மற்றும் ஈரோடு மாநகர் தெற்கு, கிழக்கு, மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர். மேலும் அக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கழக வெளியீட்டு அணி துணைச் செயலாளர் பெ.முத்துமாணிக்கம் அவர்களது இளையமகன் மருத்துவர் மு.கெளசிகன், கழக முன்னாள் சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் கே.என்.சின்னத்தம்பி, சென்னிமலை பேரூர் கழக முன்னாள் செயலாளர் சோடாக்கடை முத்துசாமி, கழகத் தொண்டரணி தோழர் ம.லோகநாதன் அவர்களின் தந்தையார் மணி, மாவட்ட இலக்கியணி புரவலர் அக்ரகாரம் செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் ஆகியோரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
நடைபெற உள்ள கழகத்தின் 32வது பொதுக்குழுவில் தகுதியான கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.






