நான் அல்லாஹ் என்று சொல்வதற்கு முன்பாக அம்மா என்றழைத்த அன்னைத் தமிழே ஆட்சி மொழியாக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த, மதச்சார்பற்ற இந்தியா இன்றும் என்றும் தொடர வேண்டும் என்று கனவு கண்ட கண்ணியத் தமிழர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களின் 131 ஆம் ஆண்டு பிறந்த நாளான 05.06.2026 அன்று திருவல்லிக்கேணி வாலாஜா பெரியபள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர் போர்வை போர்த்தி துரை வைகோ எம்.பி., மரியாதை செலுத்தினார். அவரது பெயரில் ஃபாத்திஹா ஓதி பிரார்த்தனை செய்யப்பட்டது.
அவரது நினைவிடத்தில் நின்று காயிதே மில்லத் அவர்களின் "இந்தியா மதச்சார்பற்ற நாடாக என்றென்றும் தொடர வேண்டும்" என்ற உணர்வை உள்வாங்கி துரை வைகோ எம்.பி., உறுதியேற்றுக் கொண்டார்.
துணைப் பொதுச்செயலாளர் சு.ஜீவன் எம்.சி., மாவட்டக் கழகச் செயலாளர்கள் டி.சி.இராஜேந்திரன், நெமிலிச்சேரி மு.பாபு, வழக்கறிஞர் சைதை ப.சுப்புரமணி எம்.சி., லயன் மாவை மகேந்திரன், தீர்மானக்குழு செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜெ.சிக்கந்தர், பகுதி கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், சிறுபான்மை பிரிவு தோழர்கள் மற்றும் கழக தொண்டர்கள் உடன் கலந்து கொண்டனர்.






