புதன், 15 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!

காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் துரை வைகோ எம்.பி., மலர்ப்போர்வை அணிவித்தார்

காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் துரை வைகோ எம்.பி., மலர்ப்போர்வை அணிவித்தார்

காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களின் 131வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் துரை வைகோ எம்.பி. மலர்ப் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதச்சார்பற்ற இந்தியா என்ற அவரது இலட்சியத்தை உறுதிப்படுத்தும் வகையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நான் அல்லாஹ் என்று சொல்வதற்கு முன்பாக அம்மா என்றழைத்த அன்னைத் தமிழே ஆட்சி மொழியாக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த, மதச்சார்பற்ற இந்தியா இன்றும் என்றும் தொடர வேண்டும் என்று கனவு கண்ட கண்ணியத் தமிழர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களின் 131 ஆம் ஆண்டு பிறந்த நாளான 05.06.2026 அன்று திருவல்லிக்கேணி வாலாஜா பெரியபள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர் போர்வை போர்த்தி துரை வைகோ எம்.பி., மரியாதை செலுத்தினார். அவரது பெயரில் ஃபாத்திஹா ஓதி பிரார்த்தனை செய்யப்பட்டது.

அவரது நினைவிடத்தில் நின்று காயிதே மில்லத் அவர்களின் "இந்தியா மதச்சார்பற்ற நாடாக என்றென்றும் தொடர வேண்டும்" என்ற உணர்வை உள்வாங்கி துரை வைகோ எம்.பி., உறுதியேற்றுக் கொண்டார்.

துணைப் பொதுச்செயலாளர் சு.ஜீவன் எம்.சி., மாவட்டக் கழகச் செயலாளர்கள் டி.சி.இராஜேந்திரன், நெமிலிச்சேரி மு.பாபு, வழக்கறிஞர் சைதை ப.சுப்புரமணி எம்.சி., லயன் மாவை மகேந்திரன், தீர்மானக்குழு செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜெ.சிக்கந்தர், பகுதி கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், சிறுபான்மை பிரிவு தோழர்கள் மற்றும் கழக தொண்டர்கள் உடன் கலந்து கொண்டனர்.