செவ்வாய், 14 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!

இறால் ஆலையில் அமோனியா கசிவால் தொழிலாளர்கள் உயிரிழப்பு! விசாரணைக் குழு பரிந்துரையை செயல்படுத்துக

இறால் ஆலையில் அமோனியா கசிவால் தொழிலாளர்கள் உயிரிழப்பு! விசாரணைக் குழு பரிந்துரையை செயல்படுத்துக

பெரியபாளையம் இறால் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவால் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பவத்துக்கு காரணமான அலட்சியத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடும், காயமடைந்த தொழிலாளர்களுக்கு சிறந்த சிகிச்சையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு வாய், மூக்கிலிருந்து ரத்தக் கசிவும் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அருகிலுள்ள சில மருத்துவமனைகளில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது.

வைகோ அறிக்கை இந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் இவற்றையெல்லாம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொது நல அமைப்பினர் பலமுறை அரசுக்கு வேண்டுகோள் விட்டுள்ளனர். ஆனால் அதிகாரிகளின் மெத்தனப் போக்காலும், ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தாலும் தொழிலாளர்கள் உயிர் பலியாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த, தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் மற்றும் பொதுச் சுகாதாரக் கூடுதல் இயக்குநர் ஆகியோரைக் கொண்ட 3 பேர் குழுவை அமைத்து 24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கையையும், 3 நாள்களுக்குள் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருக்கிறார்.

விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து தகுந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்த வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு சட்ட பூர்வ நட்ட ஈடு தொகையை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து, அவர்களது உயிரைக் காக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 22.06.2026 அன்று விடுத்துள்ள அறிக்கை.