சுற்றுச்சூழலைப் பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி கண்ட கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், திருநீர்மலையில் சீமைக் கருவேல மரங்களை அகற்றினார்.
செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் மாவை.மகேந்திரன் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் துணைப் பொதுச்செயலாளர் சு.ஜீவன், அமைப்புச் செயலாளர் சு.குருநாதன், சட்டத்துறைச் செயலாளர் கோ.நன்மாறன், தீர்மானக் குழு செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன், மகளிர் அணிச் செயலாளர் மல்லிகா தயாளன், சிறுபான்மை பிரிவுச் செயலாளர் ஜெ.சிக்கந்தர், மாவட்டக் கழகச் செயலாளர்கள் சைதை ப.சுப்பிரமணி, பூ.லோகநாதன், பாரத் கே.ஆர்.இராஜேந்திரன், ஜி.கருணாகரன், காயல் இ.கோவிந்தராஜ், நொச்சிக்குப்பம் சி.ரவிக்குமார், தென்றல் நிசார், நா.பாஸ்கர், ப.டில்லிபாபு மற்றும் செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், சென்னை மண்டல தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் (22.06.2026).






