திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டம் 05.06.2026 அன்று காலை 10 மணிக்கு திருப்பூர் கே.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் ஆடிட்டர் இரா.அன்பழகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 400க்கும் அதிகமான கழக தோழர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
வீரபாண்டி, கணேஷ், மோகன், நல்லூர் சர்புதீன், ராஜ், மண்ணறை திருமூர்த்தி, சதீஷ், அனுப்பர்பாளையம் பிரபு, இராயபுரம் திலீபன் மன்றத்தின் சக்தி, சரவணன், பொதுக்குழு உறுப்பினர் இராமசாமி, 9 ஆவது வட்டம் பாண்டியன், இராமசாமி, வைகோ சம்பத், சிவானந்தம், மேட்டுப்பாளையம் கணேஷ், பாண்டியன் நகர் கங்கை அமரன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் முத்துராஜ், துணைச் செயலாளர் பூபதி, நகர துணைச் செயலாளர் வழக்கறிஞர் தமயந்தி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் இ.என்.கந்தசாமி, கழக தேர்தல் பணி துணைச் செயலாளர் எஸ்.ரெத்தினசாமி உள்ளிட்ட 28 தோழர்கள் கழக வளர்ச்சி குறித்து தங்களது கருத்துகளை விளக்கி உரையாற்றினார்கள்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கழகத் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் சி.கிருஷ்ணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பாராட்டுக்கு நன்றி தெரிவித்து டாக்டர் சி.கிருஷ்ணன் உரையாற்றினார்.
கழக கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் அவர்களின் கருத்துரைக்கு பின்னர் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன்ராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இராயபுரம் பகுதிக் கழக செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.






