வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

மதுரை இரயில்வே கோட்ட மேலாளருடன் துரை வைகோ எம்.பி., சந்திப்பு

மதுரை இரயில்வே கோட்ட மேலாளருடன் துரை வைகோ எம்.பி., சந்திப்பு

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் பல்வேறு ரயில்வே சார்ந்த கோரிக்கைகள் குறித்து 13.06.2026 அன்று காலை மதுரை ரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, கோரிக்கை மனுக்களை வழங்கி துரை வைகோ எம்.பி., விரிவாக கலந்துரையாடினார்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் பல்வேறு ரயில்வே சார்ந்த கோரிக்கைகள் குறித்து 13.06.2026 அன்று காலை மதுரை ரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, கோரிக்கை மனுக்களை வழங்கி துரை வைகோ எம்.பி., விரிவாக கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் கடந்த 30.05.2026 அன்று அவர் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்ட குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, கழிப்பறை பராமரிப்பு, குடிநீர் வசதிகள், RO குடிநீர், தேசியக் கொடி ஏற்றுதல் மற்றும் அம்ரித் பாரத் நிலைய மேம்பாட்டுப் பணிகளை நவம்பர் 2026-க்குள் தரமாக நிறைவு செய்ய வலியுறுத்தினார். மேலும், புதுக்கோட்டை ரயில் நிலையத்தை General Quota முறைக்கு மாற்றுவது மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கழிப்பறையை கட்டணமின்றி பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பாகவும் கோரிக்கை வைத்தார். மேலும், உடையான்பட்டி மற்றும் பூங்குடி ரயில்வே மேம்பாலத் திட்டங்கள், திண்டுக்கல்-திருச்சி வழித்தடத்தில் கூடுதல் ஷட்டில் ரயில்கள், புதிய இராமேஸ்வரம்-திருச்சி மற்றும் திருச்சி-திருச்செந்தூர் இன்டர்சிட்டி ரயில்கள், திருச்சி-திண்டுக்கல் DEMU-வை பழனி வரை நீட்டித்தல், திருச்சி-காரைக்குடி ஷட்டிலை மானாமதுரை வரை நீட்டித்தல், கீரனூர் ROB மற்றும் போட்மெயில் ரயில் நிறுத்தம், இனாம் குளத்தூர் ரயில்வே கேட்டில் நிலத்தடி மின்கம்பி அமைப்பதற்கான அனுமதி, மற்றும் கோவில்பட்டி மழைநீர் வடிகால் திட்டத்திற்கு NOC வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தார். இந்தக் கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற்றது. புதுக்கோட்டை அம்ரித் பாரத் நிலைய மேம்பாட்டுப் பணிகள் நவம்பர் 2026-க்குள் நிறைவடையும், புதுக்கோட்டை General Quota கோரிக்கை பரிசீலிக்கப்படும், கீரனூர் ரயில்வே மேம்பாலத் திட்டம் தற்போது பரிசீலனையில் உள்ளது. மேலும் இனாம்குளத்தூர் ரயில்வே கேட்டில் நிலத்தடி மின்கம்பி அமைப்பதற்கான அனுமதி தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று கோட்ட மேலாளர் உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து, இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணும் வகையில், தனது அலுவலகம் ரயில்வே மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடையே தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும் என்றும் துரை வைகோ எம்.பி., தெரிவித்தார். திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் ரயில்வே சார்ந்த கோரிக்கைகள் அனைத்தையும் சாதகமான முறையில் பரிசீலித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் உறுதியளித்தார்.

மதுரை இரயில்வே கோட்ட மேலாளருடன் துரை வைகோ எம்.பி., சந்திப்பு | சங்கொலி