திரைப்பட இயக்குநர்- சிறந்த திரைக்கதை ஆசிரியர் - சிறந்த நடிகர் இசை அமைப்பாளர் இதழாசிரியர் என பன்முக ஆற்றல் கொண்ட பாக்கியராஜ் அவர்கள் இன்று மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அண்மையில் மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குநராக அவரின் முதல் திரைப்படமான 16 வயதினிலே திரைப்படத்தில் அடியெடுத்து வைத்து, அந்தத் துறையில் சாதனை சரித்திரம் படைத்தவர் பாக்கியராஜ். கொங்கு தமிழில் நகைச்சுவை இழைந்த உரையாடல்களும், முற்போக்குக் கொள்கைகளை வலியுறுத்தும் அவரது திரைப்படங்களும் தமிழ் மக்களின் பாராட்டுக்களைப் பெரிதும் பெற்றது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரபூர்வ வார ஏடான 'சங்கொலி' இதழின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிய பாக்கியராஜ் அவர்கள், 'பாக்யா' என்ற வார இதழையும், ஆசிரியராகப் பொறுப்பேற்று சிறப்புடன் நடத்தி வந்தார். அவரின் மறைவு திரை உலகிற்கும், இதழியல் துறைக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் துயரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும், ரசிகப் பெருமக்களுக்கும்; ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 27.06.2026 அன்று விடுத்துள்ள இரங்கல் அறிக்கை.

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும், பொதுமக்களைக் கொன்றவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும், போராடியவர்கள் மீதான பொய் வழக்குகளை இரத்து செய்ய வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
மேலும் படிக்க »




