திரைப்பட இயக்குநர்- சிறந்த திரைக்கதை ஆசிரியர் - சிறந்த நடிகர் இசை அமைப்பாளர் இதழாசிரியர் என பன்முக ஆற்றல் கொண்ட பாக்கியராஜ் அவர்கள் இன்று மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அண்மையில் மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குநராக அவரின் முதல் திரைப்படமான 16 வயதினிலே திரைப்படத்தில் அடியெடுத்து வைத்து, அந்தத் துறையில் சாதனை சரித்திரம் படைத்தவர் பாக்கியராஜ். கொங்கு தமிழில் நகைச்சுவை இழைந்த உரையாடல்களும், முற்போக்குக் கொள்கைகளை வலியுறுத்தும் அவரது திரைப்படங்களும் தமிழ் மக்களின் பாராட்டுக்களைப் பெரிதும் பெற்றது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரபூர்வ வார ஏடான 'சங்கொலி' இதழின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிய பாக்கியராஜ் அவர்கள், 'பாக்யா' என்ற வார இதழையும், ஆசிரியராகப் பொறுப்பேற்று சிறப்புடன் நடத்தி வந்தார். அவரின் மறைவு திரை உலகிற்கும், இதழியல் துறைக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் துயரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும், ரசிகப் பெருமக்களுக்கும்; ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 27.06.2026 அன்று விடுத்துள்ள இரங்கல் அறிக்கை.

அண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்
திருவனந்தபுரம் டாக்டர் அப்துல்கலாம் கல்வி மையத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான அப்துல்கலாம் தேசிய விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை இராயபுரம் ரம்ஜான் மஹாலில் 29.07.2026 அன்று நடைபெற்றது.
மேலும் படிக்க »





