சுற்றுச்சூழலைப் பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி கண்ட கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், திருப்போரூரில் மாவட்டச் செயலாளர் பூ.லோகநாதன் ஏற்பாட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றினார். துணைப் பொதுச்செயலாளர் சு.ஜீவன், அமைப்புச் செயலாளர் சு.குருநாதன், தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன் மாவட்டக் கழகச் செயலாளர்கள் நெமிலிச்சேரி மு.பாபு, சைதை ப.சுப்பிரமணி, மாவை மகேந்திரன், பாரத் கே.ஆர்.இராஜேந்திரன், காயல் இ.கோவிந்தராஜ், தென்றல் நிசார், நா.பாஸ்கர், ம.தொ.மு.பே கி.வெங்கடேசன் மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகளும், கழகத் தோழர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர் (30.06.2026).

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும், பொதுமக்களைக் கொன்றவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும், போராடியவர்கள் மீதான பொய் வழக்குகளை இரத்து செய்ய வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
மேலும் படிக்க »




