திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் (2026-2027) ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (MPLADS) திட்டப் பணிகளுக்கான கோரிக்கைகள் தொடர்பாக 30.06.2026 அன்று காலை பல்வேறு இடங்களில் கள ஆய்வு துரை வைகோ எம்.பி., மேற்கொண்டார்.
முதலில், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சோழமாதேவியில் பழுதடைந்த 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை நேரில் ஆய்வு செய்தார். அப்போது அங்கே இருந்த தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணிக்கு தேவையாக ஒரு தள்ளு வண்டியும், ஒரு மின் குப்பை வாகனமும் தேவைப்படுவதாக கூறினர். அதற்கு உரிய பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். தொடர்ந்து, நாவல்பட்டு ஊராட்சி அண்ணாநகரில் பழுதடைந்த 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையும் பார்வையிட்டு, புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான தேவைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அங்கே இருந்த தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் இதனை உரிய முறையில் பரிசீலனை செய்ய அதிகாரிகளை கேட்டு கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, குண்டூர் பகுதியில் உள்ள MIET கல்லூரி அருகே மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பயணிகள் நீண்டநாள் கோரிக்கையான பேருந்து நிழற்குடை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அப்போது அங்கே உள்ள உயர்மின் கோபுர விளக்கு எரியாமல் உள்ளதை எனது கவனத்திற்கு பொதுமக்கள் கொண்டு வந்ததையடுத்து உடனடியாக அதை சரி செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நங்கவரம் பேரூராட்சி தீரன் நகரில் பழுதடைந்த 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையும், அல்லித்துறை ஊராட்சியில் பழுதடைந்த 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையும் நேரில் பார்வையிட்டு, அவற்றிற்கு மாற்றாக புதிய தொட்டிகள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கே கழிவு நீர் வடிகால் அமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு உரிய நிதி அடையாளம் காணப்பட்டு மூன்று மாதங்களில் நடைமுறை படுத்த வேண்டும் என்ற உறுதியை அதிகாரிகளிடம் பெற்றார்.
தொடர்ந்து, சிறுகமணி பேரூராட்சி பெட்டவாய்த்தலை பகுதியில் பொதுமக்கள் கோரிக்கையின் அடிப்படையில் இரண்டு புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதி மயானத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் இரண்டு ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பது தொடர்பான கோரிக்கையையும் நேரில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, சிறுகமணி பேரூர் செயலாளர் மெடிக்கல் பெரியசாமி அவர்களின் தாயார் அண்மையில் மறைவுற்றதையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, தேவையான வளர்ச்சித் திட்டங்களை விரைவாக செயல்படுத்த தொடர்ந்து களத்தில் செயல்படுவேன் என்று துரை வைகோ எம்.பி., கூறினார்.








